காற்றழுத்த தாழ்வு நிலை: 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

          வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை முதல் மேற்கு மத்திய வங்கக் கடல் வரை நீடித்துள்ள தாழ்வு நிலையால் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக காரைக்காலில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் நாகப்பட்டினத்தில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 2 செ.மீ மழையும், புதுச்சேரி,சிதம்பரம் போன்ற இடங்களில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.
-நாகை மகாகிருஷ்ணன்

கைப்பந்து போட்டி : திரூவாரூர், ஈரோடு அணிகள் வெற்றி

        கன்னியாகுமரியில் நடந்த மாநில அளவிலான இளையோர் கைப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் திருவாரூர் அணியும், மகளிர் பிரிவில் ஈரோடு அணியும் கோப்பைகளை வென்றன.
கடந்த 26-ஆம் தேதி தொடங்கி, நான்கு நாட்கள் நடந்த இந்த தொடரின் ஆடவர் பிரிவில் 20 அணிகளும், மகளிர் பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. ஆடவர் இறுதி போட்டியில் திருவாரூர் அணியை எதிர்த்து விழுப்புரம் அணி களமிறங்கியது. இதில் 25-18, 25-19, 25-12 என்ற புள்ளிகள் கணக்கில் திருவாரூர் அணி வெற்றிபெற்றது.
இதேபோல் மகளிர் போட்டியில் ஈரோடு அணியுடன் மதுரை அணி பலப்பரீச்சை நடத்தியது. இந்த போட்டியில் ஈரோடு அணி 25-15, 25-16, 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி வென்றது. இந்த தொடரில் வென்றதன் மூலம் திருவாரூர் மற்றும் ஈரோடு அணிகள், வரும் 19-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதிபெற்ற
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்
உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ளமண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது , இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்
சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால்
மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது!ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டா ன ஒரு கட்டிடம் உலக
அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)
.
நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன்( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000
வருடங்களாக மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!
.
சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
                                                                                                       - S.B.ஹரிநாத்
அன்பான உறவுகளே இன்று +2 ரிஸல்ட் வெளியாகிறது ..வெற்றி பெறும் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்துங்கள் தோல்வி பெறும் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் காயப்படுத்திவிடாதீர்கள் இன்றைய தோல்வி நாளைய இமாலய வெற்றிக்கு அடித்தளம் என்பதை கூறி அரவணையுங்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் மிகவும் சோர்ந்துவிடுவார்கள் அன்போடு அரவணைத்து அவர்களின் சோர்வான மனநிலையை மாற்றுவதே அவர்களின் எதிர்காலத்துக்கான அருமருந்து ....         
                                                                                                                    
மாணவர்களின் எதிர்காலம் அக்கரையில்   -சிபிசந்தர்